என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் நாளை அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- டி.டி.வி.தினகரன் கரத்தை வலுப்படுத்த அனைவரும் திரண்டு வரவேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டார்.
- பின்னர் கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கும் டி.டி.வி.தினகரன் மறுநாள் காலை தேனி புறப்பட்டு செல்கிறார்.
மதுரை
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளர் பேராசிரி யர் மா.ஜெயபால் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார். மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பேசுகிறார்கள்.
இந்த கூட்டத்தில் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அம்மாவின் வழித்தோன்றலான டி.டி.வி. தினகரனின் விசுவாசிகள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் செல்வர் டி.டி.வி. தினகரனின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் இன்று மாலை மதுரை வருகிறார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை அங்கிருந்து ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கும் டி.டி.வி.தினகரன் மறுநாள் காலை தேனி புறப்பட்டு செல்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்