search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்களுடன் பங்கேற்போம் - மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு
    X

    விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டிய காட்சி.

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்களுடன் பங்கேற்போம் - மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு

    • மதுரை மாநாடு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி டூவிபுரத்தில் நடந்தது.
    • சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது உள்ளது என்று சண்முகநாதன் கூறினார்.

    தூத்துக்குடி:

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி டூவிபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி ஸ்டிக்கரை ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் ஒட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர மன்றத்தலைவர் இரா.ஹென்றி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், கே.ஜெ. பிரபாகர், ஜெ.தன ராஜ், பகுதி செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி,ஜோதிமணி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, வக்கீல்கள் முனியசாமி, சரவணபெருமாள், பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல் ராஜ், மணிகண்டன் மற்றும் ரமேஷ்கிருஷ்ணன், பிராங்ளின் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு எக்கு கோட்டையாக மாற்றினார். எம்.ஜி.ஆர். ஒரு தலைமுறை, ஜெயலலிதா ஒரு தலைமுறை. தற்போது 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி 2 கோடியே 30 லட்சத்துக்கு மேலாக உறுப்பி னர்களை சேர்த்து உள்ளார். இதனால் உலகிலேயே 7-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவாகி உள்ளது. மதுரை மாநாடு சிறப்பாக அமையும். இதனால் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியும், எம்.பி.யும் இருக்கும் இடம் தெரியாமல் போ வார்கள். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது. மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 1000 வாகனங்களில் 15 ஆயிரம் தொண்டர்கள் செல்ல உள்ளோம் என்று கூறினார்.

    Next Story
    ×