search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    மதுவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • கோவிலில் உள்ள அம்மனுக்கு மதுவநாயகி என்றும், சிவபெருமானுக்கு மதுவனேஸ்வரர் என பெயர் பெற்றது.
    • கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ராமாயண காலத்தில் சீதையும் ராமனும் இந்த பகுதிக்கு வந்தனர்.

    அப்போது இப்பகுதியில் நல்ல நீரோட்டம் நல்ல பசுமை ஆகியவை இருந்த காரணத்தினால் சீதை இந்த நிலத்திற்கு நல்ல நிலம் என பெயரிட்டு காலப்போக்கில் அது மருவி நன்னிலம் என பெயர் பெற்றது.

    இங்கு உள்ள கோவிலில் உள்ள அம்மனுக்கு மதுவ நாயகி என்றும், சிவபெ ருமானுக்கு மதுவனேஸ்வரர் என பெயர் பெற்றது சோழர் மன்னர்களில் ஒருவனான கோச்சோங்கண்ணனால் கட்டிய யானை புகாமாட கோவில் வகையை சார்ந்த கோயிலாகும்.

    பழமை வாய்ந்த மதுவ நாயகி உடனுறை மதுவனே ஸ்வரர் கோவில் கும்பாபிஷே கத்தையொட்டி நான்கு கால யாக பூஜைகள் மகா பூர்ணாகுதி நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு வலம் வந்து கோபுரத்தைஅடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×