search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
    X

    காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

    • ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள்.
    • ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழாவை முன்னிட்டு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நடைபெற்ற ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் சிவலோகநாயகி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக பணியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×