search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில்  முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    உடன்குடியில் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • நண்பகலில் சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பில் வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு மந்திரங்கள் ஒதப்பட்டது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்துபுனித நீர் எடுத்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் ஊற்றப்பட்டது.

    நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×