என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளி அம்மன் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா -கொடியேற்றத்துடன் தொடங்கியது
- அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் அலங்கார சப்ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
- மாணவ- மாணவிகளுக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்கத்திற்கு சொந்தமான அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் காளியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் நாள் மண்டகப்படியான காமராஜ் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 39-ம் ஆண்டு முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அலங்கார சப்ரத்தில் சிம்ம வாகனத்தில் சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பாலகுருசாமி நாடார் ஞானம்மாள் மின்னொளி கலையரங்கத்தில் சிறுவர் சிறுமியகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் உறவின்முறை தலைவர் வேல் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகராஜா முனியசாமி வேலாயுத ராஜா அருண் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் அமலி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காமராஜ் நாடார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மகா பிரபு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்