search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padrakaali"

    • அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் அலங்கார சப்ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
    • மாணவ- மாணவிகளுக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்கத்திற்கு சொந்தமான அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் காளியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் நாள் மண்டகப்படியான காமராஜ் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 39-ம் ஆண்டு முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்ரகாளியம்மன் இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அலங்கார சப்ரத்தில் சிம்ம வாகனத்தில் சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பாலகுருசாமி நாடார் ஞானம்மாள் மின்னொளி கலையரங்கத்தில் சிறுவர் சிறுமியகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் உறவின்முறை தலைவர் வேல் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகராஜா முனியசாமி வேலாயுத ராஜா அருண் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் அமலி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காமராஜ் நாடார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மகா பிரபு நன்றி கூறினார்.

    ×