search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தி முனையில் செல்போன் பறிப்பு
    X

    கத்தி முனையில் செல்போன் பறிப்பு

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கத்தி முனையில் செல்போன் பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர்.

    மதுரை

    பெருங்குடி, அம்பேத்கர் நகரை சேர்ந்த பால்பாண்டி மகன் பாண்டியராஜன் (22). நேற்று இரவு இவர் நண்பருடன் பெருங்குடி பகுதியில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த கீரைத்துறை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெரு, ராஜ்குமார் மகன் சக்திவேல் (22), ஜெய்ஹிந்த்புரம், ராமையா தெரு, முனியசாமி மகன் ஆயகிருஷ்ணன் (20), கலையரசன் மகன் செந்தூர்ராஜன் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1050-ஐ பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தீபன் (29). இவர் நேற்று குலமங்கலம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார்.

    அப்போது கோவில் பாப்பாக்குடி, மீனாட்சி நகர், பழனி மகன் அருண்குமார் (24), அகிம்சாபுரம் சக்தி கணேசன் (36), திருமங்கலம், காங்கேயநத்தம் காக்கா பாண்டி (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1200, செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    ஆனையூர், கருப்பசாமி நகரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவர் நேற்று மிளகரனை, கொல்லங்குளம் அய்யனார் கோவில் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த பாசிங்காபுரம், அம்பேத்கர் காலனி பரதன் மகன் பாரதி (23), விசால் நகர் பழனிவேல் மகன் பிரதீப் (22), காளியம்மன் கோவில் தெரு முருகேசன் மகன் நம்பிராஜா (24) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×