search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    • லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி, மகளிடம் மிரட்டி வந்துள்ளார்.

    கரூர்

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி வாசுகி என்ற மனைவியும், இலக்கிய செல்வி என்ற மகளும், சிவசுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் கடந்த 23-ந்தேதி ஒரு லாரியில் பொள்ளாச்சியில் இருந்து இளநீரை ஏற்றிக்கொண்டு சென்னை சென்று இறக்கினார்.

    பின்னர் அன்று இரவு சென்னையில் இருந்து கம்பிகளை லாரியில் ஏற்றி கொண்டு பொள்ளாச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பவித்திரம் என்னும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு லாரியின் ஏணிப்படியில் நைலான் கயிறு மூலம் தனக்கு தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக தனது மனைவி, மகளிடம் நான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×