search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா
    X

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    சிவகிரியில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா

    • நிகழ்ச்சிக்கு மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தலைமை தாங்கினார்.
    • ஒடிசாவில் ரெயில் விபத்து காரணமாக பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப் படத்திற்கு சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் மாலைகள் அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பேரூர் தி.மு.க. செயலாளரும், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோ கரன், வக்கீல் மருதப்பன், பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளரும் வாசு. யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கருணாநிதியின் உருவப் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக ஒரிசாவில் ெரயில் விபத்து காரணமாக பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாள் அன்று பிறந்து ஒரு வயது நிரம்பிய டாக்டர் செண்பக விநாயகம் பேத்திக்கு அனை வரும் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் டாக்டர் ஜோதிமணிகண்டன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மகளிர் அணி கிருஷ்ண லீலா, கலைஞர் பகுத்தறிவு பாசறை அணி செயலாளர் நல்லசிவன், விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, ஆனந்தா ஆறுமுகம், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், அவைத்த லைவர் துரை ராஜ், பொரு ளாளர் பரம சிவம், முத்தையா, சி.எஸ்.மணி, பிச்சுமணி, இளைய ராஜா, புல்லட் கணேசன், கதிரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×