search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    ராஜாக்கமங்கலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே கார விளையை சேர்ந்த ஞானபால் மகன் சதீஷ் (வயது 18). சதீஷ் தற்போது 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×