search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பேரூராட்சிக்குட்ட பகுதியில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி
    X

    மண்டைக்காடு பேரூராட்சிக்குட்ட பகுதியில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்
    • இன்னுயிர் காப்போம் –நம்மை காக்கும் 48 திட்டம்,

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சியில் மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, இன்னுயிர் காப்போம் –நம்மை காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கா லமானவர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உண வுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றி ருந்தது.

    மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்து றையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×