search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
    X

    தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

    • நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் இன்று நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தோவாளை தாலுகா வீரமார்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×