search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று பூட்டிய கடைக்குள் உரிமையாளர் பிணம்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் இன்று பூட்டிய கடைக்குள் உரிமையாளர் பிணம்

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழப் பெருவிளை கோவிலடி விளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 47).

    இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.விஜயன் நாகர்கோவில் இந்து கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி கடை வைத்துள்ளார்.

    புனிதா நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று காலை விஜயன் வழக்கம் போல் கடையை திறப்பதற்காக கடைக்கு வந்துள்ளார்.இரவு விஜயன் வீட்டிற்கு செல்லவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி புனிதா அவரது செல்போனை தொடர்பு கொண்டு உள்ளார். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இரவு கணவர் வீட்டுக்கு வராததால் இன்று காலையில்புனிதா செட்டிகுளத்தில் உள்ள கடைக்கு வந்துள்ளார்.

    அப்போது கடையின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. பூட்டு போடவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை திறந்து கடைக்குள் சென்றபோது விஜயன் தூக்கில் பிணமாக தொங்கினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புனிதா கதறி அழுதார்.

    பின்னர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விஜயன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். விஜயன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கடைக்குள் பேட்டரி கடை அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×