என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே கீழ்குளம் வில்லாரி விளை சந்திப்பு பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை அமைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீர் என ஒரு கடையில் மதுபான பொருட்களை இறக்கியுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான பொருட்கள் இறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி பொருட் களை கடையில் இறக்கினர். இதையடுத்து சம்மந்தபட்ட 15-ம் வார்டு கவுன்சிலர் அனிதா தலைமையில், பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் உட்பட பொதுமக்கள் திரண்டு இரவில் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஒன்றும் மற்றும் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் மதுபான கடையில் உள்ள பொருட்களை அகற்றி னால் மட்டுமே கலைந்து செல்வ தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குளச்சல்.டி.எஸ்.பி. தங்கராமன் போராட்ட காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தனியார் மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்து வதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதில் பொது மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மனித உரிமை துறை பொறுப்பாளர் ராஜகிளன், பாரதிய ஜனதா கிள்ளியூர் வட்டார தலைவர் தன சிங், மாவட்ட செயலாளர் சுடர் சிங், கவுன்சிலர்கள் லாசர், எமில் ஜெபசிங் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேச்சு வார்த்தையில் மது பான கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக புதுக் கடை போலீசார் அனுமதி யின்றி மறியல் போராட் டம் நடத்தியதாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்