search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் பிரபல ரவுடி கொலை
    X

    நாகர்கோவில் பிரபல ரவுடி கொலை

    • குடிபோதையில் என்னை அடித்ததால் கத்தியால் குத்தி கொன்றேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் நான்கு வழி சாலை பணி நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் நேற்று முன்தினம் குடிபோதையில் வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குருந்தன்கோடு முக்கலம்பாட்டையைச் சேர்ந்த அசோக் மற்றும் அஜின்ஜோஸ் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த ரீகன் (வயது 35) என்பது தெரிய வந்தது. ரீகன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த வாரம் தான் ஜெயிலில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் அவர் கொலை செய் யப்பட்டுள்ளார். கொலைக் கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கைது செய்யப்பட்ட அசோக், அஜின் ஜோஸ் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப் போது அஜின் ஜோஸ் கூறிய தாவது:-

    எனக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததையடுத்து எனது பாதுகாப்பிற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றை வாங்கி பாதுகாப்பிற்காக வைத்திருந்தேன். கொலை செய்யப்பட்ட ரீகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வந்து என்னை தொடர்பு கொண்டார்.

    ஜெயிலில் இருந்த எனது நண்பர் ஒருவர் ரீகனிடம் என்னை பார்க்குமாறு கூறியதாக கூறினார். இதனால் ரீகனை சுங்கான்கடைக்கு வருமாறு கூறிேனன். அவர் அங்கு வந்தார். நாங்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்களுக்குள் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ரீகன், என்னிடம் நீ என்ன பெரிய ரவுடியா? உன் மீது 2 வழக்குதான் உள்ளது. எனக்கு 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்று கூறி என்னை சரமாரியாக தாக்கினார் . இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நான் எனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை எடுத்து போலீசார் அஜின்ஜோஸ், அசோக் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×