என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாழக்குடி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.
- சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி:
தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தூய்மை பணி செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் சில காரணங்களுக்காக தங்களது சொந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வீட்டில் மகன் முரளி மட்டும் தங்குவது வழக்கம். நேற்று வேலை விஷயமாக அவர் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டில் உள்ள கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் செயின், வெள்ளி கப்பு, வெள்ளி விளக்கு, மகளுடைய பிரசவத்திற்காக வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்று உள்ளார்கள்.
காலையில் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபால கிருஷ்ணன் ஆரல்வா ய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் பிரான்ஸிஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்