search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    இரணியல் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த விவசாயி விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கி இறந்தார்.
    • உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌
    • அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் குடும்பத்தை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×