search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே முதியவர் தற்கொலை
    X

    புதுக்கடை அருகே முதியவர் தற்கொலை

    • தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் வேதமணி (வயது76). இவரது மனைவி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

    இதனால் தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி விஷப் பொடி தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவி னர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேதமணி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவரது மகன் ஜெபசிங் (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×