search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
    X

    கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசிய காட்சி. 

    நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம்.

    நாகர்கோவில்:

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குவதால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலை விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×