என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
- போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது பரிதாபம்
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 60).
இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வீட்டுக்கு புறப்பட்டார். கல்லுக்கட்டி அருகே வரும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.
எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் பீர் முகமது மற்றும் மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த தேங்காய் பட்டினத்தை சேர்ந்த லிபின்(24),மருதம் கோட்டை சேர்ந்த ஜிஜோ (22) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீர்முகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராபியா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்