search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டபோது எடுத்த படம் 

    ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
    • ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

    ஆரல்வாய்மொழி:

    அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாழக்குடி நகரச் செயலர் பிரமநாயகம் பிள்ளை, ரோகினி அய்யப்பன்,

    தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், கச்சேரி நாகராஜன், பேரவை நிர்வாகிகள் சுந்தரம் இசக்கியப்பன், ஒல்சி, பேச்சியம்மாள், மல்லிகா, அமுதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுயம்புலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×