search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியில் 3 நாட்கள் இதய நோய் மருத்துவ முகாம்
    X

    நாகர்கோவில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியில் 3 நாட்கள் இதய நோய் மருத்துவ முகாம்

    • நாளை தொடங்குகிறதுஇருதய நோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.
    • முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக பார்வதிபுரத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் களியங்காடு- இறச்சகுளம் சாலையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது.

    இங்கு இலவச இதய நோய் மருத்துவ முகாம் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (27-ந் தேதி) முகாம் தொடங்குகிறது. தொடர்ந்து 28,29-ந் தேதிகளிலும் முகாம் நடக்கிறது.

    முகாமில் இ.சி.ஜி, எக்கோ, சர்க்கரை நோய் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 75 சதவீத சலுகை கட்டணத்தில் ஆஞ்சியோகிராம் செய்வ தற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் கலந்து கொள்ப வர்கள் தற்போது முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் அனை வருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருதய நோய் நிபுணர்கள் வெங்கடேஷ், ஸ்ரீதர சுதன், மகாதேவன் மற்றும் சிறந்த மருத்துவ குழுவினர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    முகாமில் கலந்து கொள்ள வருப வர்களுக்கு வசதியாக பார்வதிபுரத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    Next Story
    ×