search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
    X

    கோப்பு படம் 

    திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

    • போலீசில் தந்தை புகார்
    • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள தெற்கேகுழிவிளை அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலாளி.

    இவரது மகள் அபிஷா (வயது23). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிஷா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அபிஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்ப த்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    அபிஷாவின் செல் போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ற தகவல் தான் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவட்டார் போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×