search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான மூதாட்டி குளச்சலில் மீட்பு
    X

    சுப்புலக்ஷ்மி

    மாயமான மூதாட்டி குளச்சலில் மீட்பு

    • தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர்
    • காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    நாகர்கோவில்:

    குளச்சல் காவல் நிலையத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் ஏழை மூதாட்டி ஒருவர் வந்தார்.அவர் ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.இதை பார்த்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்பட்டார்.ஊர் மற்றும் பெயரை கேட்ட இன்ஸ்பெக்டரிடம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரம் என்றும், பெயர் சுப்புலக்ஷ்மி, வயது 57. கணவர் செங்கல் சூளை தொழிலாளி முத்துகிருஷ்ணன் என்றும் கூறினார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அப்போது சுப்புலக்ஷ்மி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போனார், கணவர் முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று புதுக்கோட்டை போலீசார் குளச்சல் இன்ஸ்பெக்டரிடம் கூறினர்.இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் மூதாட்டி சுப்புலக்ஷ்மியை ஒரு காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×