search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி டிரைவர் கொலை வழக்கு
    X

    கோப்பு படம் 

    ஆரல்வாய்மொழி டிரைவர் கொலை வழக்கு

    • 3 பேர் கோர்ட்டில் ஆஜர்
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 16-ந்தேதி இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் தாழக்குடி-மாதவலாயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தபோது ஒரு கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தவிளை யைச் சேர்ந்த பிரவீன் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராம் சித்தார்த் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெபின் ஆகிய மூன்று பேரை கைது செய்த னர். கைது செய்யப் பட்ட மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாகியுள்ள மேலும் 4 பேரை தேடி வந்த நிலையில் ராமன் புதூர் சாரோன் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் (34), அழகிய பாண்டிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சாம் ஈஷாக் (37), சீதப்பால் மேல தெருவை சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூன்று பேர் பத்நாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    சரண் அடைந்த மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க ஆரல்வாய்மொழி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து உடனே அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப் பட்டது. போலீஸ் காவல் வழங்கப்பட்டதையடுத்து ஜோன்ஸ், சாம் ஈஷாக், அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.

    விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜ்குமாரை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.சம்பவத்தன்று பிரவீன், முருகன் இருவரும் சூப் கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த ராஜ்குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களை தீர்த்து கட்டி விடுவதாக ராஜ்குமார் மிரட்டி உள்ளார். இதை பிரவீன், முருகன் இருவரும் எங்களிடம் தெரிவித்தனர்.

    உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு வந்த ராஜ்குமாரிடம் இது தொடர்பாக கேட்டோம். அப்போது ஏற்பட்ட தகரா றில் அவரை தீர்த்து கட்டிய தாக கூறியுள்ளனர். தொடர்ந்து 3பேரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு பிறகு இன்று மாலை 3 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலை மறை வாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகிறார் கள்.

    Next Story
    ×