search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை படத்தில் காணலாம் 

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை வட்ட வழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வா ளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிறுத்தப்படாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலு வலகத்திலும் ஒப்படைக் கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×