search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
    X

    கோப்பு படம் 

    இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

    • இரணியல் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து.
    • மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை யடுத்து கஞ்சா வைத்திருந்த அஜய், ஜெரின்ஜோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×