என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் 2 பெட்டலங்கள் இருந்தன. அதில் 2 தங்கச்சங்கிலிகள் இருந்ததை கண்டனர். இவை ஒரு கிலோ 750 கிராம் எடை கொண்டவை.
மேலும் விமானத்தில் இருந்த ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 250 கிராம் தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை வந்த இந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து உள்நாட்டு பயணியாக கடத்தி செல்ல முயன்று இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த பயணி யார்? என்றும், இது சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சையத் கரீம் (வயது 63) என்பவரிடம் இருந்து 173 கிராம் தங்கக்கட்டிகளையும், சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பக்ரூதீன்(30) என்பவரிடம் இருந்து 233 கிராம் தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெபீர்அகமது(38) என்பவர் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3,500 யூரோ கரன்சிகளை வைத்திருந்தார். அதனை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த அமீர்காஜா(35) என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் இந்திய பணத்தை கைப்பற்றினார்கள். இது ஹவாலா பணமா? என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
காஞ்சீபுரம்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கே.தேவராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அணைவரும் நமது பாரம்பரிய மிக்க விளைபாெருட்களையும், அவற்றிலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நமது உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் நமது வியாபாரம், விவசாயம் மற்றும் சுய தொழில்களை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட துனைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பி.கோபிநாத்தை வெள்ளையன் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் வருகிற மே 5-ம் தேதி வரும் 35-வது வணிகர் தினவிழாவை வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்டு மாநாடாக காஞ்சீபுரத்தில் கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரவையின் மாநில துணைபொது செயலாளர் கே.முருகன், மாவட்ட செயலாளர் கே.முருகன், வர்தக சங்க செயலாளர் ஜெ.தேவபிரகாஷ் கலந்து கொண்டனர்.
திருவான்மியூர்:
சென்னையில் இருந்து மாணவிகளை மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி வைத்தது யார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரே இங்கிருந்து மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுபற்றி தகவல் தெரிய வந்ததும் பாலவாக்கம் வி.ஜி.பி. அவென்யூ 2-வது குறுக்கு தெருவில் உள்ள பீட்டரின் வீட்டில் போலீசார் இன்று காலையில் அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பீட்டர் ஏற்கனவே வீட்டை காலி செய்து இருப்பது தெரிய வந்தது.
எனவே பீட்டர் பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
கல்பாக்கம் அருகே உள்ள ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). லோடு ஆட்டோ டிரைவர்.
இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வம் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூந்தண்டலம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வம் பிணமாக கிடந்தார். மர்ம கும்பல் அவரை கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வம் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது லோடு ஆட்டோ நின்றது. அதன் என்ஜின் ‘ஆப்’ செய்யப்படாமல் இயங்கிய படியே இருந்தது.
எனவே செல்வம் வந்த லோடு ஆட்டோவை மர்ம கும்பல் பின் தொடர்ந்து வந்து வழிமறித்து இருக்கலாம் என்றும் பயந்து போன அவர் வண்டியில் இருந்து இறங்கி ஒட்டம் பிடித்தபோது விரட்டிச் சென்று கொலை செய்து இருக்கலாம் என்றும் தெரிகிறது.
செல்வத்துக்கு யாருடனும் மோதல் உள்ளதா? பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செல்வம் பயன்படுத்திய செல்போனில் கடைசியாக யார்? யாருடன் பேசினார் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலையுண்ட செல்வத்துக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் பார்சல் ஒன்று கிடந்தது. சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அதனை பிரித்து பார்த்தனர்.அதில் 1 கிலோ தங்க கட்டி இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பயணிகள் போல் மர்ம நபர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பதும், அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து அதனை விமானத்திலேயே விட்டு தப்பி சென்று இருப்பதும் தெரிந்தது.
தங்க கட்டி கிடந்த இடம் அருகே உள்ள இருக்கையில் பயணம் செய்த பயணிகள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
கேளம்பாக்கத்தை அடுத்த கானத்தூர், ரெட்டி குப்பத்தை சேர்ந்தவர் நாகூரான். இவரது மனைவி குப்புலட்சுமி (வயது 25). இவர்கள் குடும்பத்தினர் 8 பேருடன் கடம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்றனர்.
பின்னர் அவர்கள் ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் குப்புலட்சுமி, உறவினர்கள் பொம்மி, ரகு, தமிழ்ச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் குப்புலட்சுமியின் வலது கால் நசுங்கியது.
இது குறித்து உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்சு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே குப்புலட்சுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்னர் வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்த குப்புலட்மி உள்பட 4 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குப்புலட்சுமியின் கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும், பொம்மி, ரகு, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குப்புலட்சுமியின் உறவினர்கள் கூறும் போது,
விபத்து நடந்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னரே ஆம்புலன்சு வந்தது. இதற்குள் குப்புலட்சுமி, அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக ஆம்புலன்சு வந்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்தனர். #Tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கிழக்கு ராஜ வீதியில் பிரசித்திபெற்ற குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. கந்த புராணம் அரங்கேறிய இந்த கோவிலில் அதனை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரி யாருக்கு வெண்கல சிலை ஒன்று இருந்தது.
நேற்று முன்தினம் அந்த சிலை திடீரென மாயமானது. இதுபற்றி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து ஆய்வு மேற் கொண்டனர்.
சிலைகளுக்கு பொருப்பாக உள்ள கோவில் ஸ்தானிகர் சந்திரமவுலி என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மகளிர் தினத்தை உலக அளவில் கொண்டாடும் இந்த நேரத்தில் பெண்களுக்கு விரோதமான காரியங்கள் தினம் தினம் நடந்து வருகின்றன.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெண்ணுக்கு எதிரான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று கூறுகிறார். இதை எதிர்க்கட்சிகள் சொன்னால் கூட பரவாயில்லை.

பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், பாதுகாக்கிறவர்களே சொல்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது.
மாணவி அஸ்வினியை குத்தி கொலை செய்தவன், கர்ப்பிணி பெண் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் காமராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது.
பட்ஜெட் என்பது ஒருநாள் நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது. இதற்கு முன்பு போடப்பட்ட பட்ஜெட்டுகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரயோ ஜனம் இல்லை.
இதற்கு முன்பு போட்ட பட்ஜெட்டை நிறைவேற்றினால் தமிழ்நாடு ஏன் பின்னோக்கி இருக்கிறது. பட்ஜெட், சட்டசபை கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் எல்லாம் சடங்குபோல் ஆகிவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இது கர்நாடகாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். இதுபற்றி முதல்- அமைச்சர் கூட சொல்லி இருக்கிறார். இது வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி, எம்.ஜி.ஆர். ஆட்சி தருவேன் என்று கூறி உள்ளார். அதை அ.தி.மு.க.வினரே எதிர்த்து உள்ளனர். ரஜினி அறிக்கையாக மட்டும் பேசாமல் அதன்படி நிற்க வேண்டும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர். என்று மக்களால் அழைக்கப்பட்டவர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படும் என்று ஓ.பன்னீர் செல்வம் சொல்லி இருக்கிறார். அடுத்து வரப்போவது சட்டசபை தேர்தல்தான். சட்டசபை தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ அதனை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #PremalathaVijayakanth #dmdk #tnassembly
ஆலந்தூர்:
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு நிர்வாகமே கிடையாது. வலிமையான தலைமை கிடையாது. அதனால் பல உரிமைகளை இழந்து இருக்கிறோம். பல சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நடக்கிறது.
காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி உயிரிழந்தது. கல்லூரி மாணவி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் நடை பெறுகிறது.
இதற்கு காரணம் நல்ல தகுதியான அதிகாரிகள் நியமனம் செய்யவில்லை. நல்ல தகுதியான அதிகாரிகள் சாதாரண பொறுப்பில் இருக்கிறார்கள்.
லஞ்சம் வாங்கி தருகின்றவர்களை செயலாளர்களாகவும், துறை செயலாளர்களாகவும் நியமித்து இருக்கிறார்கள்.
தற்போதுள்ள சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நல்ல அதிகாரிதான். அவருக்கு அரசாங்கம் முழு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். என்ன ஆட்சி கொடுத்தார். காமராஜர் ஆட்சி கொடுப்பேன் என்று ரஜினி சொன்னாலும் பரவாயில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வருகிற மார்ச் 29-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30-ந்தேதி விவசாயிகள், இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். உச்சநீதி மன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வில்லை. அரசியல் சாசன நெருக்கடியை மத்திய அரசுக்கு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
ஆலந்தூர்:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும், நீர் முறை செய்யும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அதில் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறையிடமும் வலியுறுத்தி உள்ளோம்.
நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது உள்ளத்தை உலுக்கும் துயர சம்பவம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவிகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களுக்கான முழு பாதுகாப்பை அரசு அளிக்கும்.
தமிழக அரசின் பட்ஜெட் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #localbodyelections #TNgovernment #tamilnews
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த பெருமாள்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பழுதடைந்த பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற திருவாரூரை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 70) மீது சென்னையை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து நடந்த அடுத்த சில மணி நேரத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்து ரோட்டில் விழுந்தனர்.
உடனே அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் தீபேஸ்வர் (20), லியாண்டர் (19) என்று தெரியவந்தது. தீபேஸ்வர் கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். லியாண்டர் வண்டலூர் அருகே உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். காயம் அடைந்தவர்கள் பெயர் விக்டர், அபிஷேக் ஆகும். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






