என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தாம்பரம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே மதுரவாயல் செல்லும் பைபாஸ் சாலையில் குழந்தை அழும் குரல் கேட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது துணியால் சுற்றிய நிலையில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    குப்பை தொட்டிக்குள் அருகில் வீசப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளங்குழந்தை குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தன்பேரில் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது குழந்தைக்கு தேவையான பால் அதன் உடல் நலத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள்.

    சாலையில் வீசப்பட்ட அந்த குழந்தை யாருடையது? பெற்றெடுத்த தாய் குழந்தையை வீதியில் வீசிச் செல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தசா மகாவித்யா யாகம் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய யாகத்தில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் வேண்டியும் தசா மகாவித்யா ஹோமம் இன்று தொடங்கியது. இந்த யாகம் வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு யாகம் தொடங்குவதற்கு முன்பாக திடீரென நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அவர் காமாட்சி அம்மனை பயபக்தியுடன் கும்பிட்டார். பின்னர் 8 மணி அளவில் தொடங்கிய யாகத்தில் அவர் பங்கேற்றார். பின்னர் 8.30 மணி அளவில் லதா ரஜினிகாந்த் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் வேண்டியும் நடைபெறும் இந்த யாகத்தில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

    இன்று காலை நடந்த யாகத்துடன் தலைமைப் பதவிக்கு வர வேண்டும், எதிரிகள் பலம் குறைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஸ்ரீதட்சிண காளியாகமும் நடந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனுக்கு ரஜினிகாந்த் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பிரசாதம் அவரது வீட்டிற்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    யாகம் குறித்து கோவிலில் அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி கூறியதாவது:-

    உலக நன்மைக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் காமாட்சியம்மன் கோவிலில் இன்று காலை தொடங்கி வரும் 18-ந் தேதி வரை 10 நாட்கள் தசா மகாவித்யா ஹோமம் நடைபெறுகிறது.

    இந்த ஹோமத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்திய- மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தினமும் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8.30 மணி வரையிலும் இந்த ஹோமம் நடைபெறுகிறது.

    இதற்கு முன் இந்த ஹோமம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது என்று அவர் கூறினார். #Tamilnews
    மாமல்லபுரத்தை அடுத்த வருகிற 11-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாட கண்காட்சிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாட கண்காட்சி நடை பெற உள்ளது.

    இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கண் காட்சிக்காக சுமார் 280 ஏக்கர் நிலத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு லாரிகளில் வந்த வண்ணம் உள்ளன.

    கண்காட்சி தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அரங்கங்களின் உட்பகுதி, தளவாடங்களை இயக்கும் பகுதி, ராணுவ வீரர்களின் சாகச பகுதி அனைத்தும் ராணுவ பாதுகாப்பில் உள்ளது.

    வளாக வெளிப் பகுதி, நுழைவு வாயில், மற்றும் தொலைதூர கண்காணிப்பு பகுதிகள் அனைத்தும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    வளாகத்தின் வெளிப் பகுதி வேலிகள், போக்கு வரத்து சாலைகள், வெளியே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இவைகளை பாதுகாக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த 3 அடுக்கு பாதுகாப்பு நேற்றில் இருந்து அமலுக்கு வந்தது. கண்காட்சி வளாகம் முழுவதையும் கண்காணிக்க 50 அடி உயரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட உயர் கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்தபடி பைனாகுலர், வயர்லஸ், கேமரா பொருத்திய நவீன துப்பாக்கிகளுடன் வீரர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவிடந்தை வரை வாகனங்கள் வேகமாக செல்லாமல் இருக்க 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 100மீட்டர் தூரத்துக்கு ஒரு 3 அடுக்கு வேகத்தடை போடப்பட்டுள்ளது.

    இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, ராணுவ கண்காட்சி பகுதியை பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவோ அனுமதி கிடையாது. அந்த பகுதி முழுவதும் 144தடை உத்தரவு போன்று காட்சி அளிக்கிறது.

    கண்காட்சிக்கு வரும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய ரிசார்ட்களில் ரூம்கள் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கும் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    ஓட்டல்களில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு நவீன ரேடார் வசதியுடன் கண்காட்சி வளாகம் உள்ளிருந்தே பாதுகாப்பை ராணுவத்தினர் கண் காணித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் அருகே லாரியில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திற்கு புகார் வந்தது. அவரும் போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

    அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்திய கோளிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் அடுத்த வளத்தோட்டம், மாகரல் மின்வாரிய அலுவலகம் அருகில் மாட்டுவண்டி மற்றும் லாரியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரனுக்கு புகார் வந்தது. அவர் போலீசாருடன் அங்கு விரைந்தார்.

    அப்போது வளத்தோட்டம் பகுதியில் மணல் கடத்திய தூசி பகுதியை சேர்ந்த குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மாகரல் மின்வாரியம் அருகில் லாரியில் மணல் கடத்தி வந்த காவனூர்புதுச்சேரி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (36), ஊரல் கிராமத்தை சேர்ந்த கிளீனர் அருள்முருகன் (22) ஆகியோரையும் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்

    மாமல்லபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் சங்கரா பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் தேவசந்தர் (வயது 19), துளிபாலா பார்கவ் (19).

    நேற்று மதியம் தேவசந்தர், துளிபாலா பார்கவ் உள்பட 17 மாணவர்கள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தேவசந்தர், துளிபாலா பார்கவ் ஆகிய 2 பேரையும் ராட்சதஅலை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    சிறிது நேரத்தில் அதே பகுதியில் தேவசந்தர் உடல் கரை ஒதுங்கியது. மாயமான துளிபாலா பார்கவை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரி கடற்கரையில் துளிபாலா பார்கவ் பிணம் கரை ஒதுங்கியது.

    மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர் தேவசந்தர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். துளிபாலா பார்கவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். #tamilnews

    நீலாங்கரையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம் அடைந்தார் என்று கூறி ஆஸ்பத்திரி மீது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையில் உள்ள நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. பெயிண்டராக இருக்கிறார். இவரது மனைவி சற்குணம் (32). கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.

    எனவே அவரை அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நலக்குறைவு எற்பட்டுள்ளது. ஆபரே‌ஷன் செய்தால் குணமாகும் என தெரிவித்தார்.

    உடனே ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சற்குணம் திடீரென இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நீலாங்கரை போலீசில் சற்குணத்தின் கணவர் ராஜா புகார் செய்தார். அதில், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது.

    இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 480 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    11-ந் தேதி ராணுவ தடவாள உற்பத்திகள் பற்றி சர்வதேச நிறுவனங்களின் கலந்துரையாடல் நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கண்காட்சி திடல் அருகே பிரதமர் மோடி வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் சென்று கண்காட்சி திடல் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    இதைத் தொடர்ந்து தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, கடலோர காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று வீர சாகச நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து உரையாற்றுகிறார்.

    இந்த கண்காட்சியில் பங்கேற்று உரையாற்ற அமெரிக்கா, ரஷியா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், பின்லாந்து, மடகஸ்கார், இத்தாலி, நேபாளம், மியான்மர், கொரிய குடியரசு, போர்ச்சுக்கல், வியட்நாம், ஷீசெல்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அமைச்சர்களும் வருகின்றனர்.

    மேலும் சர்வதேச ராணுவ தடவாள உற்பத்தி நிறுவனங்களான போயிங், லாக்கன் மாட்டீன், ஏர்பஸ், ஷாபு, ரோசன், போரன் எக்ஸ்போர்ட், ரெப்லி, யுனைடெட் ஷிப்பில்டிங், பி.ஏ.இ, சிஸ்டம்ஸ், வாட்சிலா, சய்பெட், ரோடி, ‌ஷவாஸ் போன்ற நிறுவனங்களும் பங்கு பெறுகிறது.

    அவர்களது தயாரிப்பு இயந்திரங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். 5 போர் கப்பல்களை கண்காட்சி அருகே கடலில் நிறுத்த ஒத்திகை நடந்து வருகிறது.

    ராணுவ கண்காட்சியை 14-ந்தேதி பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு ரூ.100 கட்டணம். அனுமதி சீட்டை பெற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இந்த கண்காட்சி கடைசியாக 2016-ல் கோவாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    கேளம்பாக்கம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜயா (27).

    இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அதே பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு உதவியாக சசிக்குமாரின் அண்ணன் மெய்ப்பொருள் கடையை கவனித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் கிராமம் ஆகும்.

    குழந்தை இல்லாததால் சசிக்குமாரும், விஜயாவும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த இருவரும் ஓட்டலுக்கு வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மெய்ப்பொருள் வீட்டுக்கு வந்து பார்த்த போது சசிக்குமாரும், விஜயாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவர்களது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    செங்கல்பட்டு அருகே வாலிபரை வெட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா சிட்டி தொழிற் பூங்காவில் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சய் வேலை பார்த்து வருகிறார்.

    இரவு அவர் பணிமுடிந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கத்தியால் வெட்டினர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சஞ்சய்யிடம் கொள்ளை நடந்த அன்று பரனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சிவா, தினேஷ் என்பதும் நண்பர்களுடன் மகேந்திரா சிட்டி தொழிற் பூங்காவில் சஞ்சய் என்பவரிடம் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததும் தெரிந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான வல்லத்தை சேர்ந்த தென்னரசு, நவீன்ராஜ், கரண்குமார், அனுமந்த புத்தேரி துளசிதரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 2½ பவுன் செயின், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டு தப்பியபோது விபத்தில் சிக்கியதால் அவர்கள் பிடிபட்டு உள்ளனர்.

    மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கவிருக்கும் பிரமாண்டமான ராணுவ கண்காட்சிக்கு பீரங்கி வண்டிகள், போர் விமானங்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.
    மாமல்லபுரம்:

    மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச ராணுவ கண்காட்சி இந்த ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் நடை பெறுகிறது.

    இதில் இந்திய ராணுவத்தின் பீரங்கி டாங்கிகள் அணிவகுப்பு, பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சாகசம், ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் கண்காட்சிகளில் இடம் பெறுகின்றன.

    இந்த கண்காட்சி வர்த்தக பார்வையாளர்களுக்காக 11-ந்தேதி திறக்கப்படும். பின்னர் 12-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைப்பார்.

    இதுவரை நடத்தப்பட்ட ராணுவ கண்காட்சியில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிகளவில் இடம் பெற்று வந்தன. தற்போது அதிகப்பட்சமாக 523 இந்திய நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.

    மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 70 பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. 154 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா, சுவிடன், ரஷியா, இஸ்ரேல், பின்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    ராணுவ கண்காட்சியில் பீரங்கிகள் பங்கு பெறுவதற்காக மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. பீரங்கிகள் டிரைலர் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. அவைகள் மாமல்லபுரம் கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒத்திகைகள் நடைபெறுகின்றன.



    இதேபோல் மாமல்லபுரம் கடலில் இந்திய கடலோர கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ராணுவ தளவாடங்கள் வைக்கப்படும்.

    மாமல்லபுரத்துக்கு அணி வகுத்து செல்லும் பீரங்கிகளை அப்பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். #tamilnews
    உத்திரமேரூர் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    மதுராந்தகத்தை அடுத்த கிளியானூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் உத்திரமேரூர் அருகே உள்ள கடச்சவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகினார். இதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வாலிபரின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்ப்பமான சிறுமிக்கும் வாலிபருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த வாலிபர் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள். #Tamilnews

    மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டது அடக்குமுறை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கமல் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தேசிய ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அந்த போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது. அது என்னுடைய எண்ணம். போராட்டத்தை அடக்க முயற்சி செய்தால் வன்முறையாக மாற வாய்ப்புள்ளது. வன்முறையாக மாறாமல் இருப்பது இருதரப்பினரின் கடமையே. எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டது அடக்குமுறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Tamilnews
    ×