search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yagam"

    • ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று நவதுர்கா ஹோமம் நடைபெற்றது.
    • 16-ந் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமம் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நெல்லி த்தோப்பு கோவிலூரில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    தற்போது கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.

    விழாவில் சத சண்டி மகாயாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று நவ துர்கா ஹோமம் நடைபெற்றது.

    வருகிற 13-ஆம் தேதி முனீஸ்வரர் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    14-ம் தேதி ஆடிக் கழிவு பெருவிழா நடக்கிறது. 15-ம் தேதி முனீஸ்வரர் படையல் பூஜையும், 16-ம் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமமும் நடைபெற உள்ளன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை காத்தாயி அடிமை சாமிநாதன் முனையதிரியர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நவ சண்டியாகம் 2 கால யாகபூஜையுடன் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூரில் அமைந்துள்ள கிரிசுந்தரி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி வளாகத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம் இரண்டு கால யாக பூஜையுடன் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீமத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள் ஆதீனம் முன்னிலையில் சப்த சதி பாராயணம் மற்றும் 13 வகையான யாகப் பொருட்கள், பழங்கள், இனிப்பு வகைகள், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நெய்வேத்திய பொருட்கள், மலர் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகள், பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை, யாக குண்டத்தில் சமர்ப்பித்து மகாபூ ர்ணாஹூதி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு அஷ்டபுஜ மகாகாளிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ்சிவன் குருக்கள் ,கோயில் பணியா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.
    • சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு- கேது பரிகார ஸ்தலமான ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.

    காலை 9 மணிக்கு கணபதி யாகத்துடன் தொடங்குகிறது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 12 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிர் இளநீர் பன்னீர் விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன்ஜி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குகிறார். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.

    • அரியலூர் அருகே தை அமாவாசையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிரா–மத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் தை அமாவா–சையை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிரா–மத்தில் உள்ள சாமுண் டீஸ்வரி கோவில் சன்ன–தியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தி–யங்கார தேவிக்கு மாதந்ேதாறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அம்மாவாசை அன்று நடைபெற்ற சண்டி–யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.
    • இதில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.

    இதையொட்டி தினம் தோறும் சத்ரு சம்கார சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு யாகம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோயிலின்நிர்வாகி ஸ்ரீதர் செய்தி ருந்தார். அர்ச்சகர் ஹரி தலைமை யிலான குழு வினர் சிறப்பு பூஜை, அலங்காரம், யாகத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். இரவு கந்த புராண சொற்பொழிவு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.
    முக்கடலும் சங்கமிக்கும் தென்முனையில், அன்னை உமையவள் கன்னியாக, குமரியாக எழுந்தருளி நித்திய தவம் இருக்கும் திருத்தலமே கன்னியாகுமரி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. அதுபோல இங்கு பெண் சித்தர் மாயம்மா திருமடம், குகநாதேஸ்வரர் திருக்கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், குமரி பகவதி அம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. சுவாமி விவேகானந்தர் குமரிக்கு விஜயம் செய்த போது குமரி அன்னையை தரிசித்து கடலுக்குள் சிறிது தூரம் நீந்திச் சென்று, அங்குள்ள பாறையில் தியானம் செய்தார்.

    இத்தகைய அருள் வழங்கும் ஆன்மிக பூமியில், திருவேங்கடம் வெங்கடாஜலபதியும் எழுந்தருளியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பாகும். திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு நடைபெறும் அன்றாட வைபவங்களும், திருவிழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் இத்தலத்திலும் நடைபெறுகிறது.

    திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கும் சிறப்பாக நடக்கும். திருப்பதி பிரசாதமான லட்டு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைகளில் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தேர் ஓடும் வகையில், மாடவீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை ஒட்டி மடப்பள்ளி, வேதபாடசாலை, கோமடமும் அமைந்துள்ளன. திருமலையில் உள்ளது போன்றே ‘சுவாமி புஷ்கரணி' எனும் தீர்த்தக்குளமும் இங்குள்ளது.

    வெங்கடாஜலபதி திருக்கோவில் மேல் தளம், கீழ் தளம் என இருதளங்களுடன் கொடிமரம், மகாமண்டபம், ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் உள்ளன. மேல்தளத்தில் மூலவர் திருப்பதி ஏழுமலையான் எனும் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருட பகவான் சன்னிதிகள் இருக்கின்றன.

    கருவறையில் மூலவர் வெங்கடாஜலபதியின் திருப்பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி `சித்திரை விஷூ' நன்னாளில் சூரிய ஒளி விழும் வகையில் சிறப்பாக ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆறரை அடி உயரத்தில் ஏழுமலையான் அருள்தருவது ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. உடல்நோய்கள், மன நோய்கள், வறுமை, தரித்திரம், தோஷங்கள், துயரங்கள் அகலவும் இத்தல வெங்கடாஜலபதியை தரிசித்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். முடிக் காணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து, திருமலையில் ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி), மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச் செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. ஏனெனில் மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?.

    எனவே திருமணச் செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை வாங்கினார். அந்த கடனை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மஹாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்னும் இடத்தில் அலர்மேல் மங்கை எனும் பத்மாவதி தாயாரை இருத்தினார். பின்னர் தான் மட்டும் நின்ற திருக்கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாஜலபதியாய், ஏழுமலையின் சிகரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினார்.

    வெள்ளிக் கிழமைகளில் திருமலை வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின் போது பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி திருஉலா நடைபெறுகிறது. இந்த அத்தனை விழாக்களும் திருமலை திருப்பதியில் நடைபெறும் அதேநாளில் அதே நேரத்தில், குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் குமரி திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் விவேகானந்தபுரம் இருக்கிறது.

    திருப்பதி வரலாறு

    கிருஷ்ண அவதாரத்தில் பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை தனது கரங்களால் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அம்மலையே கலியுகத்தில் திருவேங்கடமலையாய் வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறதாம்.

    ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டிப் பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் எனும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும்பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக்கொன்று பூமாதேவியை மீட்டார். பின்பு பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார். அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள் கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

    அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு, தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் (வேம்-பாவங்கள், கடம்-எரித்தல்) எனவும், தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்- அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்) எனவும் இருவகை பொருளுண்டு. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி, ஆதலால் ‘திருப்பதி’ ஆயிற்று.
    கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று முன்தினம், யாகசாலை பூஜையும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 3-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தன. கேசிராதிவசம் என்ற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொடிமரத்துக்கு செம்பு தகடு பொருத்தும் பணியும், மாலையில் ஹோமம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்டவையும் நடந்தன.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர திருப்பதி வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் நேற்று மும்முரமாக நடந்தது. இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலை சுற்றிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவில் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

    27-ந் தேதி கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கடற்கரையையொட்டி கோவில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கோவிலை பார்வையிட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். முக்கிய நாட்களில் அங்கு 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க கோவிலை போல் நாடு முழுவதும் பல இடங்களில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி டெல்லி குருசேத்திரத்தில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2-வதாக இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த கோவில் 5½ ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் ஆண்டாள் அம்மாள் சன்னதியும், வெங்கடாசலபதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன. வெங்கடாசலபதி 7½ அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளார்.

    கோவிலின் கீழ் பகுதியில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் மற்றும் அன்னதான கூடம், தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டு உள்ளன. திருப்பதியை போன்று, கன்னியாகுமரியில் எழுந்தருளியுள்ள இந்த கோவிலிலும் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் நேற்று காலையில் செம்பு தகடுகள் பதிக்கும் பணி நடந்தது.


    கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலை படத்தில் காணலாம்.

    கும்பாபிஷேக விழா நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர். யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழை தோரணங்கள், பூக்களால் அலங்காரமிட்டு காட்சி அளித்தது.

    இங்கு உற்சவர் வெங்கடாசலபதி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவர் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. உற்சவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைக்கு முன்னதாக பல்வேறு பூஜைகள் நடந்தன. அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டது. மேலும் யாகசாலை பூஜையின் தொடக்கமாக வெங்கடாசலபதி கோவில் முழுவதும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

    யாகசாலை பூஜையில் தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவி பாபு, ஸ்ரீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, கன்னியாகுமரி திருப்பதி கோவிலின் உதவி செயல்அலுவலர் ரவி, உதவி பொறியாளர் அமர்நாத், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற நாட்களில் கேசரா திவ்சம், ஹோமம், பூர்ணாகுதி, ஜலாதி வாசம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பக்தர்கள் நலனுக்காக பழனி முருகன் கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 20-ந் தேதி இரவு திருக்கல்யாணமும், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், 21-ந் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்த விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திரு விழாவுக்கான அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    முன்னதாக காலை 7 மணிக்கு மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் விநாயகர் பூஜை, 9 கலசங்கள் வைத்து புன்னியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி ஹோமம், ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்குஅனுமதிபெறப்பட்டது.

    தொடர்ந்து மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து செய்திருந்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை வடக்கு கிரிவீதியில் வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், பிரார்த்தனையும், வருகிற 31-ந் தேதி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், பிரார்த்தனையும் நடக்கிறது. வருகிற 2-ந் தேதி வனதுர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜையும், 3-ந் தேதி மாலையில் பாதவிநாயகர் கோவில், கன்னிமார், கருப்பணசுவாமி கோவில், பைரவ- பைரவி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பலிபூஜை நடக்கிறது.

    4-ந்தேதி மேற்கு கிரிவீதியில் உள்ள மகிசாசுரமர்த்தினி கோவிலில் அபிஷேகம், அலங் காரம், பிரார்த்தனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்துள்ளார்கள். 
    ×