search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலாங்கரை"

    நீலாங்கரையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை, கிழக்கு கடற் கடை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியா குமரியை சேர்ந்த அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட மோதலில் அந்தோணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடக்கிறது. ஆசிரியர் தற்கொலையை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நீலாங்கரையில் 4 மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை, சோழ மண்டல தேவி நகர், முதல் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் அக்கரை சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவருடைய பெயர் நந்த குமார் என்பதும் நீலாங்கரையைச் சேர்ந்த இவன் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது28).

    இவர் மீது துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் தேடப்பட்டு வந்த அந்தோணியை பிடித்தனர். அவரை விசாரணை செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு திடீரென்று அந்தோணி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தோணி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்தோணி இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அவர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட முயற்சித்தனர்.

    இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்த அந்தோணி உறவினர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.

    அந்தோணியை போலீசார் பிடித்தபோது அவர் தப்பித்து ஓடி கீழே விழுந்து காயம் அடைந்ததில் இறந்தாரா? அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “நேற்று இரவு வீட்டில் இருந்த அந்தோணியை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். அவரை போலீசார் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்கள். #Tamilnews
    ×