search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kelambakkam"

    கேளம்பாக்கம் அடுத்த கண்டிகையில் பெற்ற மகளுக்கு 5 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையைச் சேர்ந்தவர் காந்தி. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியிருந்தார். இவரது 18 வயது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் காந்தி, வீட்டில் இருந்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    காந்தியின் அத்துமீறல் 5 வருடத்துக்கு மேலாக நீடித்துள்ளது. ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத காந்தியின் மகள், இது பற்றி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்தார். ஆனால் காந்தி எதுபற்றியும் கண்டு கொள்ளவில்லை. மேலும் மனைவியையும், மகளையும் மிரட்டினார்.

    இது குறித்து காந்தியின் மகள் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சுப்பராஜ் உத்தரவுப்படி காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    கேளம்பாக்கம் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். #lawcollegestudent

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சுமார் 200 பேர் தங்கியுள்ளனர்.

    நேற்று இரவு 2 மாணவர்கள் தாழம்பூர் சென்றுவிட்டு கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தாழம்பூர் கூட்டுரோடு பகுதியில் வந்த போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மாணவர்களை நிற்குமாறு கூறியும் அவர்கள் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை உரக்கச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாணவர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதற்கிடையே விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் போலீசார் தங்களை தாக்கியதாக சக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.“ மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சுப்புராஜூ, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #lawcollegestudent

    ×