என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kelambakkam"

    • சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
    • பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கத்தில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்காமல் பொதுமக்களை கைக் குழந்தையுடன் அலைக்கழித்த திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாநகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். இதற்கு மிகப் பெரிய உதாரணம். இந்த வாரம், ஜூன் 4ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள், பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம்.

    சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

    இது ஒருபுறம் இருக்க கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனைவைத் தருகிறது.

    பல மணி நேரம் காத்திருந்து, இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அந்த நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம், பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

    பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றிச் சிறிதேனும் அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு நடந்துகொள்வார்களா?

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாத்து கடும் கண்டனத்துக்கு உரியது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
    • சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!

    கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.

    சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!

    இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.

    பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?

    சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேளம்பாக்கம் அடுத்த கண்டிகையில் பெற்ற மகளுக்கு 5 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையைச் சேர்ந்தவர் காந்தி. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியிருந்தார். இவரது 18 வயது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் காந்தி, வீட்டில் இருந்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    காந்தியின் அத்துமீறல் 5 வருடத்துக்கு மேலாக நீடித்துள்ளது. ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத காந்தியின் மகள், இது பற்றி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்தார். ஆனால் காந்தி எதுபற்றியும் கண்டு கொள்ளவில்லை. மேலும் மனைவியையும், மகளையும் மிரட்டினார்.

    இது குறித்து காந்தியின் மகள் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சுப்பராஜ் உத்தரவுப்படி காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    கேளம்பாக்கம் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். #lawcollegestudent

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சுமார் 200 பேர் தங்கியுள்ளனர்.

    நேற்று இரவு 2 மாணவர்கள் தாழம்பூர் சென்றுவிட்டு கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தாழம்பூர் கூட்டுரோடு பகுதியில் வந்த போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மாணவர்களை நிற்குமாறு கூறியும் அவர்கள் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை உரக்கச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாணவர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதற்கிடையே விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் போலீசார் தங்களை தாக்கியதாக சக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.“ மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சுப்புராஜூ, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #lawcollegestudent

    ×