search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக பபிதாவுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நடராஜன் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி பபிதா(45) இருந்து கவனித்து வந்தார்.

    இதனால் பபிதா வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கியிருந்தார். இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் பபிதாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    நகை-பணம் கொள்ளை

    உடனே வீட்டுக்கு புறப்பட்டு வந்த பபிதா அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் 12 கிராம் தங்க நகை, 815 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவையும் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×