search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராசிரியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை
    X

    பேராசிரியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை

    • 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை திருடப்பட்டுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ஒ.எம். ராஜீவ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61 ).

    ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், முன்பக்கம் நிறுத்திருந்த ஸ்கூட்டியை காணாதது கண்டும் அதிர்ச்சிடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×