என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
- சோதனை நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார்.
- மேலாண்மை இயக்குனர் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மின்சார மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார். ஆனால் அவரது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.
அவர் வழக்கம்போல் சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சம்பந்தமான ஆய்வு கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் மேலாண்மை இயக்குனர் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் செந்தில் பாலாஜி வந்தபோது ஐ.டி. சோதனை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், என்னுடைய வீடுகளில் சோதனை எதுவும் நடக்கவில்லை. என் தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது.
அதைப்பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது என்று கூறிவிட்டு கூலாக கடந்து சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்