search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் வாய்க்காலில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு
    X

    கழிவுநீர் வாய்க்காலில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு

    • இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காந்தி பூங்கா அருகே உள்ள கழிவு நீர்கால்வாயில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் கிராமநிர்வாக அதிகாரி ஜெகதீசன் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தையின் தாய் தந்தை யார் என்றும், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×