என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி அரசு மருத்துவமனையில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி சேவை தொடக்கம்
- தடையில்லா மின்சாரம், மருத்துவமனை காலிப்பணியிடம் நிரப்புதல், மகளிர் மருத்துவம், பிரசவ வசதி, குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்க வேண்டி கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார்.
சிவகிரி:
மாநில சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் சிவகிரி மருத்துவமனைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவமனை சுற்றுச்சுவர், தடையில்லா மின்சாரம், மருத்துவமனை காலிப்பணியிடம் நிரப்புதல், மகளிர் மருத்துவம், பிரசவ வசதி, குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்க வேண்டி கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பரிசீலனை செய்த அமைச்சர் உடனடியாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவகிரி அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக இலவச ஆம்புலன்ஸ் சேவை அனுமதி வழங்கினார். சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், விவசாய அணி மனோகரன், பூசைப்பாண்டியன், சி.எஸ்.மணி, தொமுச மாடசாமி, ராமச்சந்திரன், புல்லட் கணேசன், விக்னேஷ் ராஜா, கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருதுபாண்டியன், ஆசிரியர் மருதுபாண்டியன், கணேஷ் குமார், மணிகண்டன், விக்கி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சித்த மருத்துவ மருந்தாளுநர் தனகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக சிவகிரி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் இசக்கி தலைமையில் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்