என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் 'இடப்பிரச்சினையில் பெண்ணை கொன்றேன்'- கைதான உறவினர் வாக்குமூலம்
- தங்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- போலீஸ் விசாரணையில் தங்கையா சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தங்கம்(வயது 55).
கொலை
இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
சம்பவம் நடந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள், அந்த தெரு வழியாக சென்றவர்கள் என ஏராளமானோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் நாகராஜின் அண்ணன் தங்கையா என்பவர் சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
இடப்பிரச்சினை
தங்கத்தின் வீட்டின் எதிரே 2 செண்ட் இடம் உள்ளது. எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே அந்த இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நான் அந்த இடத்தில் என்னுடைய ஆடுகளை கட்டுவேன்.
ஆனால் அதில் கட்ட விடாமல் தங்கம் இடத்தை சுற்றி கயிறு கட்டிவிட்டார். சமீபத்தில் அந்த கயிற்றில் சிக்கி எனது ஆடு ஒன்று இறந்துவிட்டது.
கைது
இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கத்தை கொலை செய்தேன். சந்தேகம் வராமல் இருப்பதற்காக பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் நானும் கூடவே இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்