search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து அன்னையர் முன்னணி கூட்டம்
    X

    இந்து அன்னையர் முன்னணி கூட்டம்

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். செயலாளர்கள் பத்திரகாளி, தங்கபுஷ்பம், துணைத்தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வி வரவேற்று பேசினார். செயலாளர் சும்புகனி , துணைத்தலைவி சொர்ணமணி அமுதா பட்டுக்கனி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு மகாபாரதம், ராமாயணம் பற்றி பேசினார். திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×