search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் 11-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் 11-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • மாவட்ட அளவில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) தென்காசி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • முகாமில் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, இயக்குநர் கடிதத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், இந்த மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற விருக்கும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) தென்காசி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×