search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் கிராமசபா கூட்டம்  தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    கிராம சபா கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஏற்காட்டில் கிராமசபா கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • ஏற்காட்டில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரன் தலைமையில் நேற்று கிராமசபா நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் பகுதிக்கு செய்யப்பட வேண்டிய பனிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரன் தலைமையில் நேற்று கிராமசபா நடைபெற்றது.

    கூட்டத்தை துணை தலைவர் பாலு தொடங்கிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டார்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றம் சார்பாக செய்யப்படட் பனிகள் அதற்காக செலவிடப்படட் தொகை குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் பகுதிக்கு செய்யப்பட வேண்டிய பனிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.பொதுவாக தண்ணீர், தெரு விளக்கு, கழிப்பிடம், சாலை வசதி போன்றவைகளுக்கு இருந்தது.

    இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள அழைப்பு இருந்தும் ஓரு சில துறை ஊழியர்கள் மட்டுமே கலந்து கோண்டனர்.

    லாங்கில் பேட்டை வார்டு உறுப்பினர் ராஜா என்பவர் பட்டா இல்லாமல் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு மனு அழித்தார்.

    இதில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பராணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கோகிலா மற்றும் ஒரு சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் மஞ்சகுட்டை பஞ்சாயத்தில் அதன் தலைவர் சுகந்தா ராமசந்திரன் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.தலைச்சோலை கிராமத்தில் அதன் தலைவர் செந்தில் பிரபு தலைமையில் கூட்டம் நடந்தது.

    Next Story
    ×