என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா கழகத்துடன் அரசு போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட வேண்டும்
- வெளிநாட்டு பயணிகளையும் கவரக்கூடிய அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலா போக்கு வரத்துக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் இணைக்கப்பட வேண்டும்.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவும் திருச்சியில் 3 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகதொழிலா ளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 20 ஆயிரத்து 304 பஸ்கள் உள்ளன. இவற்றில் 19, 290 பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
தற்போது நடைபெற்ற 14 -வது ஊதிய ஒப்பந்த த்தில் மூன்றாண்டுகால ஒப்பந்தம் என்பது நான்காண்டு காலமாக நீட்டிக்கப்ப ட்டுள்ளது. சம்பள உயர்வு குறைவாகவே உள்ளது. 2015ம் ஆண்டு முதல் உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத்துடன் இணைக்கப்படவில்லை.
இது தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவும் திருச்சியில் 3 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. நாளை மாலை பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 3, 4 ம் தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள மஹாலில் நடைபெறுகிறது .
இந்த மாநாட்டில் பஸ்க ளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை சுற்றுச்சூ ழலுக்கு கேடு விளைவிக்காத மரபுசாரா எரிபொருளை பயன்படுத்துவது, தமிழ்நா ட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
வெளிநா ட்டு பயணிகளையும் கவர க்கூடிய அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலா போக்கு வரத்துக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் இணைக்கப்பட வேண்டும் .
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்மாநில குழு தலைவர் சுப்பராயன்எம்.பி, தமிழ் மாநில குழு பொதுச் செயலாளர் மூர்த்தி , போக்குவரத்து கழக சம்மேளனதலைவர், முன்னாள் எம்எல்.ஏ. ஆறுமுகம், பொதுச்செயலாளர் ஆறுமுகம் , துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்