என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
- அரசு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்குவதன் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
- இந்த கொள்முதல் நிலையத்தின் மூலமாக 250-ல் இருந்து 300 விவசாயிகள் பயனடைவார்கள்.
தென்காசி:
செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
செங்கோட்டை வட்டாரம் புளியரையில் 290 ஹெக்டேரில் கார் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. அரசு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலை தொடங்குவதன் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
சிறிய ரக நெல்லுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.21.60 பைசாவுக்கும் பெரிய ரகத்துக்கு ஒரு கிலோவிற்கு ரூ.20.15 பைசாவுக்கும் அரசு கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக பணி நடைபெற்று வருகிறது.
புளியரையில் தொடங்கப்பட்ட இந்த கொள்முதல் நிலையத்தின் மூலமாக 250-ல் இருந்து 300 விவசாயிகள் பயனடை வார்கள். 1900மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வருவதற்கு முன்னதாக, விவசாயிகள் தங்களுடைய கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று கொள்முதல் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்களிடம் இணையத்தில் பதிவு செய்து அதனை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் ஏற்கப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுமதிக்கப்படும்.
நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கூடுதலாக இல்லாமல் இருக்க வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்த 2அல்லது 3 நாட்களுக் குள்ளாக செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகா னந்தம் , செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ராஜேஷ், நிர்வாக அலுவலர்கள் கற்பகவல்லி, வெங்கடேஷ், செங்கோட்டை வட்டாட்சியர் கந்தசாமி , வேளாண்மை அலுவலர் சிவமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பீவி, புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம், துணைத் தலைவர் லட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் திருமலை செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்புராஜ் ,விவசாய சங்க தலைவர் செல்லத்துரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்