search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், பொது மருத்துவ முகாம்
    X

    பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சையில், பொது மருத்துவ முகாம்

    • பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை நாஞ்சிக்கோட்டை முனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தி.மு.க மருத்துவ அணியின் சார்பில் பொது மருத்துவ முகாம் துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் 37- வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கண் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோ தனை, பொது மருத்துவம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இந்த முகாமில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை .சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சதய விழா குழு தலைவர் து .செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினர்.

    மேலும் இந்த முகாமில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் டாக்டர்கள் வசந்தகுமார், சதீஷ், சுரேஷ், பாட்ஷா, ராஜராஜன், ராஜகுமார், விக்னேஷ், வெங்கடேஷ், சிந்துஜா, காயத்ரி, கலியமூர்த்தி ,ஆவியா, விஷாலி, ஜனனி, பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சரவணன் பரமசிவம், மாமன்ற உறுப்பினர் அண்ணா பிரகாஷ், ஆனந்த், உஷா, சுகந்தா, கல்பனா, வட்ட செயலாளர்கள் சுரேஷ், கரிகாலன், வைரமுத்து, குமரப்பா , 37 ஆவது வார்டு நிர்வாகிகள் ஜெபமாலை செல்வம், சேகர், அன்வர், சிவா, நாகராஜன், கணேசன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×