search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே  நெடுஞ்சாலையோரம்  குவிந்து கிடக்கும் குப்பைகள் - உடனே அகற்ற கோரிக்கை
    X

    நெடுஞ்சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

    செங்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் - உடனே அகற்ற கோரிக்கை

    • பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.
    • குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    தமிழக- கேரள எல்லையான செங்கோட்டை - பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் ஏராளமானோர் வசித்து வரும்நிலையில் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.

    அதனை ஆடுகள் சாப்பிட்டு வருவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி, அவ்வப்போது குவியும் குப்பையை உடனடியாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×