search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.
    • சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய, சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொதுமக்கள் துணையோடு கண்டறிந்து குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக நம்ம சாலை என்ற புதிய மென்பொருள் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.

    மேலும் ரூ.198 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர்- மன்னார்குடி செல்லும் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சென்னை கன்னியாகுமரி தொழில் தடத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தரராஜன், கும்பகோணம் கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயராமன், மன்னார்குடி உதவி பொறியாளர் வடிவழகன் மற்றும் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.

    • நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதில் மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

    முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க .செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணி யாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்கு மார் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.
    • சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை சத்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்தில் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்போது வரை 94 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த பணிக்காக நந்தி ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளமுள்ள புதிய பாலமும், திருத்தணி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாலம் கட்டுவதும் இதன் திட்டப் பணியாகும். அதற்காக, 3.2 கி.மீ நீளமுள்ள சாலை கூடுதலாக போடப்பட வேண்டி உள்ளது.

    மேலும் 800 மீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான செலவும் அதிகரித்தது.

    எனவே பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.

    இந்த நிலையில் தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.5.9 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நெடுஞ்சாலைப் பணியின் முழு திட்டமும் அடுத்த ஆண்டு 21-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இந்த பணிகள் முடிந்தால் போக்குவரத்து தொடர்பாக சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும். மேலும் கோவில் நகரமான திருத்தணியில் 70 சதவீதம் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    • பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தியது.
    • திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

    பரமக்குடி

    தமிழக முழுவதும் கடந்த 9-ந்தேதி முதல் நெடுஞ் சாலைத்துறை அலுவல கங்களில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பார்த்திபனூர் புறவழிச் சாலை சாலை மேம்பாட்டு பணிகளை மதுரை நெடுஞ் சாலை, திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சாலை அமைப்பதற்கான மண் நிரப்புதல் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வ றிக்கை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது திட்டங்கள் கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் சந்திரன், பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர்கள் அன்பரசு, சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும்.
    • சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ளது பிரானூர் பார்டர். இது தமிழக -கேரளாவை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது.

    முக்கிய சாலை

    கேரளாவிற்கு செல்லவும், கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும். இதனால் தினசரி ஆயிரக்கனக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது.

    இதில் பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் பின்புறம் குற்றாலம் இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளது. இச்சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    பழுதான சாலை

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ள பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் அருகாமையில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

    மேலும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப் படாததால் பருவமழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பிரானூர் முதல் புளியரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் காணப்படும் இது போன்ற பள்ளங்கலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிகை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வவர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் . குறிப்பாக குழித்துறை களியக்காவிளை இடையேயான சாலை மிக அதிக அளவில் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலை செப்பனிடுவ தற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வைத்தேன்.

    எனினும் பல்வேறு காரணங்களுக்காக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் இடை விடாது தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தேன்.

    கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன். தொடர் முயற்சிகளின் பலனாக இந்த பணிக்கான ஒப்பந்தம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

    மிக விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். பணிகளை விரைந்து முடிப்பதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் மக்களின் சிரமம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.
    • குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    தமிழக- கேரள எல்லையான செங்கோட்டை - பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் ஏராளமானோர் வசித்து வரும்நிலையில் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.

    அதனை ஆடுகள் சாப்பிட்டு வருவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி, அவ்வப்போது குவியும் குப்பையை உடனடியாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×