search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவரிடம் பல லட்சம் மோசடி
    X

    முதியவரிடம் பல லட்சம் மோசடி

    • வேலை வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் விசா வீடு தேடி வரும்.
    • பல தவணைகளாக பணம் கட்டியும் விசா வராததால் போலீசிடம் புகார் தெரிவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் முருகையான் (வயது 67). இவரது மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் வெளிநாட்டில் வேலை உள்ளது. உங்களுக்கு அந்த வேலை வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள். உங்களுக்கு விசா உள்ளிட்ட அனைத்தும் தேடி வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி முருகையனும் பல தவணைகளாக பணம் கட்டினார். மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 820 கட்டியிருந்தார். ஆனால் மெயிலில் கூறியப்படி விசாவும் வரவில்லை. பதிலுக்கு மெயில் எதுவும் வரவில்லை. சந்தேகம் அடைந்த முருகையன் மெயில் அனுப்பி பார்த்தும் பலன் இல்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.இது பற்றி தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×