search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    • “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    சேலம்:

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவருக்குமான "ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்" விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கான "ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு" ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம் நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுவரும் இரு பாலினத்தவரிடமிருந்தும் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆவணங்களுடன் கூடிய கருத்துருவை 25.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×