search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

    • மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல் போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஊராட்சியில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடந்தது. தமிழ்நாடு போிடா் மேலாண்மை ஆணையம், திருவாருா் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தேவகி துரையரசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எடையூர் மணிமாறன், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி தாசில்தாா் மலா்க்கொடி தொடங்கி வைத்தாா். எடையூா் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா், திருத்துறைப்பூண்டி வட்டவழங்கல் அலுவலா் அலெக்சாண்டா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கவுரி, முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    வெள்ளத் தடுப்பு மீட்பு பயிற்சி பெற்ற பாரதமாதா சேவை நிறுவன சமூகப் பணியாளர்கள் துர்கா தேவி, கார்த்தி, பிரபுதாசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எடையூாில் கடந்த ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, ரெட்கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவை நிறுவனம், வருவாய் துறை, சுகாதாரத்துறை, நீா்பாசன துறை, மீன்வளத்துறை, ஊரக வளா்ச்சி துறை, மின்சார வாாியம், தேசிய போிடா் மீட்பு குழு இணைந்து முன்னெச்செரிக்கை செய்தல், மக்களை மீட்டு முகாமகளில் தங்கவைத்து உணவு, மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல், போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    Next Story
    ×